ஆன்மீகம் – Common People Media https://commonpeoplemedia.in True News Sun, 28 Jan 2024 22:06:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 223532519 திருஅண்ணாமலையார் கோயில் தல வரலாறு https://commonpeoplemedia.in/spiritual/thiruvannamalai-temple-history-in-tamil/ https://commonpeoplemedia.in/spiritual/thiruvannamalai-temple-history-in-tamil/#respond Sat, 13 Jan 2024 23:39:20 +0000 http://td_uid_37_65a31f282aa71 திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற ‘நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரே, […]

The post திருஅண்ணாமலையார் கோயில் தல வரலாறு appeared first on Common People Media.

]]>
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.

இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற ‘நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரே, நம்மில் பெரியவர்’ என உரைத்தனர்.

அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திருமால் திரும்ப, அன்ன வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புப் பிழம்பாக நின்ற சிவனின் முடியைக் கண்டுவிட்டேன் எனக் கூறும்படி கேட்டார் பிரம்மர்.

தன்னால் அடியைக் கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையைத் தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை எனப் பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ஆத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனிமேல் பயன்படாதெனவும் உரைத்தார்.

தாழம்பூ, தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காகக் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார்.

திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர்.

தன்னை நோக்கித் தவமியற்றிய பார்வதியைத் தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். “திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்த தலம் இது.

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார்.

இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL | அண்ணாமலையார் கோயில் பற்றிய கட்டுரை
 

சொல்லிலக்கணம்

அண்ணாமலை – அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

காலம்

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் தனது மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை” எனக் கூறியுள்ளார்.

கோயில் அமைப்பு

24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாகும்.

இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL | அண்ணாமலையார் கோயில் பற்றிய கட்டுரை

கோபுரங்கள்

அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.

மண்டபங்கள்

இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன.

சந்நிதிகள்

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL | அண்ணாமலையார் கோயில் பற்றிய கட்டுரை

தீர்த்தங்கள்

  1. சிவகங்கை தீர்த்தம்
  2. பிரம்ம தீர்த்தம்

வழிபாடு

இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும்.

குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையைக் கிரிவலம் வந்து தங்களுக்குக் குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.

விழாக்கள்

அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

1. ஆனி மாத பிரம்மோற்சவம்

ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்குப் பூசைகள் செய்யப்படுகின்றன.

விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன.

THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL | அண்ணாமலையார் கோயில் பற்றிய கட்டுரை
2. மாசி மகம் தீர்த்தவாரி

வள்ளாள ராஜாவின் மகனாகச் சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியைச் சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.

3. கார்த்திகை தீபம்

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.

இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்தத் தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

4. பரணி தீபம்

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.

இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைக்கின்றனர்.

5. மகாதீபம்

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தினைப் பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.

THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL | அண்ணாமலையார் கோயில் பற்றிய கட்டுரை
 

பஞ்சபூதம்

இந்து மதத்தின் படி, நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் மற்றும் நிலம் ஆகிய ஐந்து கூறுகளின் அண்டத் தொகுப்பாக வாழ்க்கை தொடங்கியது.

ஒவ்வொரு பஞ்ச பூதக் கோயிலிலும் சிவபெருமான் ஐந்து அங்கங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிருத்வி லிங்கமாக, நிலச் சின்னமாகத் தோன்றினார்.

அண்ணாமலையார் கோயிலில் அக்னி லிங்கமாகவும், ஜம்புகேஸ்வரர் கோயிலில் நீரைக் குறிக்கும் அப்பு லிங்கமாகவும், காளஹஸ்தீஸ்வர கோயிலில் காற்றைக் குறிக்கும் வாயுலிங்கமாகவும், நடராஜர் கோயிலில் வானத்தைக் குறிக்கும் ஆகாச லிங்கமாகவும் தோன்றினார்.

இந்து புராணங்களில், பார்வதி தேவி சிவபெருமானின் கண் இமைகளை சிறிது நேரம் மூடினார். ஒரு வினாடியின் ஒரு பகுதியே இருந்தபோதிலும், அந்த வினாடியில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒளியும் மறைந்து, பல ஆண்டுகளாக பிரபஞ்சம் இருளில் மூழ்கியது.

அதன் பிறகு தேவியும் மற்ற தேவர்களும் தவம் செய்தனர். சிவபெருமான் பின்னர் ஆனைமலை மலையின் உச்சியில் எரியும் நெருப்புத் தூணாகத் தோன்றி, பிரபஞ்சத்திற்கு ஒளியை மீட்டெடுத்தார்.

பின்னர் அவர் பார்வதியுடன் இணைந்து சிவனின் பாதி பெண், பாதி ஆண் வடிவமான அர்த்தநாரீஸ்வரரை உருவாக்கினார். அண்ணாமலை, அல்லது சிவப்பு மலை, அண்ணாமலையார் கோவிலுக்கு பின்னால் அமைந்துள்ளது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மலையானது தூய்மையானது மற்றும் லிங்கமாக அல்லது சிவனின் அடையாளப் படமாகப் போற்றப்படுகிறது.

அதர ஸ்தலம்

 அத்தாரா ஸ்தலம் என்பது தெய்வங்களும் தெய்வங்களும் கூட பிரார்த்தனை செய்ய வரும் ஒரு கோயில். அத்தரா ஸ்தலம் வளாகத்தில் ஆறு கோவில்கள் உள்ளன. ஆறு கோவில்களில் இது மணிபூரக ஸ்தலம். பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன் மற்றும் எட்டு வசுக்கள் இக்கோயிலில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மலையில் சித்தர்கள் என்று அழைக்கப்படும் பல அற்புதமான உயிரினங்கள் வாழ்ந்துள்ளன. அருணகிரிநாதர், விடாபட்ச் தேவர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், அருணாசல தேசிகர், தெய்வசிகாமணி, மகான் சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ யோகி ராம் சூரத் குமார் மற்றும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆகியோர் இங்கு வாழ்ந்த புகழ்பெற்ற துறவிகள் ஆவார். கோயிலும் அதைச் சுற்றியுள்ள மலைகளும் பல பெரிய ஆன்மீகத் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL

The post திருஅண்ணாமலையார் கோயில் தல வரலாறு appeared first on Common People Media.

]]>
https://commonpeoplemedia.in/spiritual/thiruvannamalai-temple-history-in-tamil/feed/ 0 88
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு https://commonpeoplemedia.in/politics/madurai-meenakshi-temple-history-in-tamil/ https://commonpeoplemedia.in/politics/madurai-meenakshi-temple-history-in-tamil/#respond Sat, 13 Jan 2024 23:39:20 +0000 http://td_uid_38_65a31f2857e77 மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 65000 சதுர மீட்டர் ஆகும். 2000 […]

The post மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு appeared first on Common People Media.

]]>
மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன.

இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

இதன் மொத்தப்பரப்பு 65000 சதுர மீட்டர் ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இக்கோவில் கி.பி. 1623-1655 ஆண்டுகளில் ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சிறந்த விரிவாக்கம் பெற்றது.

இறைவன் சிவபெருமான் மனித உருவில் சுந்தரேஸ்வரராக அவதாரம் செய்து, கயல் போன்ற கண்களை உடைய மீனாட்சியை வாழ்க்கைத் துணையாக ஏற்று மகிழ்ந்தார்.

இவர்களுக்கென்று இரு கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவிலைச் சுற்றி மிகப்பெரிய நான்கு வாயில்கள் உள்ளன. இங்கே வருகை தரும் அன்பர்கள் கட்டுமானங்களில் காணப்படும் வண்ணமயமான சிற்பங்களைக் கண்டு வியக்கின்றனர்.

இக்கோவிலில் அதிசயக்கத்தக்க பிரம்மாண்டமான ஒரு காட்சி ஆயிரங்கால் மண்டபம். இம்மண்டபத்தில் ஆயிரம் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கலைநயமிக்க சிற்பங்களுடன் உறுதி வாய்ந்ததாக அமைந்துள்ளது.

திருஅண்ணாமலையார் கோயில் தல வரலாறு

எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் தூண்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும். அதன் நடைவழியில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. அதன் நுழைவாயில் அருகில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் தட்டினால் வெவ்வேறு ஒலி எழுப்பும் நுணுக்கங்களைக் கொண்ட கலை படைப்பாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.

இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.

அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் ‘சிவன் முக்திபுரம்’ என்றும் அழைக்கின்றனர்.

இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது.

விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 
1. மூலவர்

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர்.

இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், ‘இந்திர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

2. அம்பாள் சன்னிதி

இத்தளத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம், மரகதக் கல்பச்சைக்கல் லால் ஆனது.

அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார்.

மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது.

பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.

இவருக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன.

மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் ‘தடாதகைப் பிராட்டி’ என்றும் அழைப்பதுண்டு. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார்.

அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிசேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.

மீனாட்சி அம்மன் (மூலவர் இறைவி), சுந்தரேசுவரர் (மூலவர் இறைவன்), முக்குறுணி விநாயகர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காசி விசுவநாதர், லிங்கோத்பவர், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகர், சண்டிகேசுவரர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேசுவரர், சித்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், உஷா பிரதியுஷா சமேத சூரியனார், விபூதி விநாயகர், 63 நாயன்மார்கள், சப்தரிஷி மாதாக்கள், பைரவர்,மதுரை வீரன், நவக்கிரகங்கள், சங்கப் புலவர்கள், மனைவியர் சமேத மன்னர் திருமலை நாயக்கர் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகள் ஆகும்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 

கோயிலின் அமைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது.

இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.

இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டினாலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.

சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

கலையழகு மிக்க மண்டபங்கள்

கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.

  1. அஷ்ட சக்தி மண்டபம்,
  2. மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
  3. முதலி மண்டபம்,
  4. ஊஞ்சல் மண்டபம்,
  5. கம்பத்தடி மண்டபம்,
  6. கிளிக்கூட்டு மண்டபம்,
  7. மங்கையர்க்கரசி மண்டபம்,
  8. சேர்வைக்காரர் மண்டபம்,
  9. திருக்கல்யாண மண்டபம்,
  10. ஆயிரங்கால் மண்டபம்
  11. வீரவசந்தராயர் மண்டபம்
  12. அஷ்ட சக்தி மண்டபம்
1. அஷ்ட சக்தி மண்டபம்

மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் திருமேனிகளுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.

2. கம்பத்தடி மண்டபம்

கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்.

கம்பத்தடி மண்டபம், நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (கி.பி.1564–1572) கட்டப்பட்டு, பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி செய்யப்பட்டது (1877). சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விசயநகர காலப் பணியாகும்.

அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது.

கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 
3. ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருட்டிண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.

மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், சாலிவாகன ஆண்டு, கி.பி.1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது.

மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.

இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.

4. வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது.

400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூசைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் நெகிழி பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.

2 பிப்ரவரி 2018 (வெள்ளிக்கிழமை) அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டியப் பின்னர், மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது.

இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தது. தற்போது இம்மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

சிறப்புகள்

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று.

இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.

குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராசகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.

மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
 

செல்வது எப்படி?

1. வான் வழி

மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது.

இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

2. தொடர்வண்டி வழி

மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

3. சாலை வழி

தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.

The post மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு appeared first on Common People Media.

]]>
https://commonpeoplemedia.in/politics/madurai-meenakshi-temple-history-in-tamil/feed/ 0 89
கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி – Kanakkampatti Siddhar Jeeva Samaathi https://commonpeoplemedia.in/spiritual/kanakkampatti-siddhar-jeeva-samaathi/ https://commonpeoplemedia.in/spiritual/kanakkampatti-siddhar-jeeva-samaathi/#respond Sat, 13 Jan 2024 23:39:20 +0000 http://td_uid_39_65a31f2882f08 தற்போது தமிழக முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக இருப்பது இந்த கணக்கம்பட்டி சித்தரின் ஜீவ சமாதி தான். பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான். ஆனால் தற்போது அது மட்டுமல்லாமல் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பங்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். யார் அந்த கணக்கம்பட்டி சித்தர் வாருங்கள் அவரைப் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு பார்ப்போம். கணக்கன்பட்டி சித்தரின் […]

The post கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி – Kanakkampatti Siddhar Jeeva Samaathi appeared first on Common People Media.

]]>
தற்போது தமிழக முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக இருப்பது இந்த கணக்கம்பட்டி சித்தரின் ஜீவ சமாதி தான். பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான்.

Kanakkampatti Siddharஆனால் தற்போது அது மட்டுமல்லாமல் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பங்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். யார் அந்த கணக்கம்பட்டி சித்தர் வாருங்கள் அவரைப் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு பார்ப்போம்.

கணக்கன்பட்டி சித்தரின் இயற்பெயர்: காளிமுத்து என்ற பழனிச்சாமி

கணக்கன்பட்டி சித்தர் பிறந்த ஊர்: பழனி

பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தான் இந்த கணக்கன்பட்டி என்னும் ஊர். தற்போது இருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு அழுக்கு துணிவுடன், எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வந்தவர் தான் இந்த பழனிச்சாமி சித்தர்.

பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர், என் நேரமும் முருகப்பெருமான் மற்றும் அவருடைய பெருமைகளை கூறும் கதைகளையே அனைவரிடமும் கூறியும், அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றில் வந்தார். பச்சை நிறம் கொண்ட உடைகளை மட்டுமே விரிந்து வணங்கும் பழக்கம் உடையவர். மேலும் அவருடைய கையில் ஒரு அழுக்கு மூட்டையை எப்போதும் சுமந்து கொண்டே தெரிவார்.

இதனால் இவரை பைத்தியம் என்று எண்ணற்றோர் கல் எடுத்து அடித்து துரத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு:

• திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கணக்கன்பட்டி என்னும் ஊர் அமைந்துள்ளது.

• கணக்கன்பட்டிக்கு தெற்கு இருந்து சரியாக மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் அமைந்து உள்ளது சித்தரின் ஜீவ சமாதி.

• ஆரம்பத்தில் சித்தரை காண ஒரு சில பக்தர்கள் மட்டுமே அங்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறவே.

• அவரின் புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி தற்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50,000 பக்தர்கள் வந்து தரிசிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த சித்தரின் ஆலயமாக இந்த கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

கணக்கன்பட்டி சித்தர் தோற்றம்:

1. இந்நேரமும் ஆளுக்கு நிறைந்த சட்டை மற்றும் குளிக்காத உருவத்தை கொண்டவர்தான் இந்த பழனிச்சாமி மூட்டை சுவாமிகள்.

2. மேலும் பச்சை நிற அழுக்கு சட்டை மற்றும் அதற்கு நிறைந்த ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு பழனி முதல் கணக்கம்பட்டி வரை சுற்றித்திரிவார்.

3. அவர் வாழ்ந்த காலத்தில் பல்வேறு நபர்கள் இவர் பைத்தியம் என்றும் மேலும் சிலரோ இவர் சித்தரின் அவதாரம் வேண்டுதலை நிறைவேற்றும் கடவுள் என்றும் அவரை வணங்கி வந்தனர்.

அழுக்கு மூட்டை சித்தர் என பெயர் வர காரணம்:

1. பழனி மற்றும் கணக்கன்பட்டி சுற்றுவட்டாரங்களில் இவர் அழுக்கு நிறைந்த மூட்டையை கையில் தூக்கிக் கொண்டு சுற்றியதால் இவர் அழுக்கு மூட்டை சித்தர் மக்கள் அழைக்க தொடங்கினர்.

2. ஆரம்ப காலத்தில் இவரை கண்ட பொதுமக்கள் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லை எடுத்து அடுத்து தொடங்கினார்.

3. பழனியில் உள்ள இரண்டு பெரும் கோயில்களில் ஒன்றான இடும்பன் மலையில் தினமும் அமர்ந்து தவம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி – கணக்கம்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்:

ஆரம்ப காலத்தில் சித்தரின் அற்புதங்களைக் கண்டு பலர் அவருக்கு புதிய உடைகள் மற்றும் உண்ண உணவும் வாங்கி பல பேர் கொடுத்தனர். இதனை விரும்பாத சித்தர் அவர்களை அடித்து துரத்த ஆரம்பித்தார்.

சித்தரின் ஆலயத்திற்கு சென்றாலே ஒருவிதமான புதிய உணர்வுடன் கூடிய அதிர்வலைகள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.

ஒருமுறை ஒரு நபர் தன் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டு சித்தரின் இருக்கும் இடம் வழியாக எதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சித்தர் கிழக்கு போய் வடக்கு போ என்று தெரிவித்துள்ளார்.

இவர் ஏதோ சொல்கிறார் என்று அதனை கண்டு கொள்ளாமல் சென்ற அந்த நபர். அடுத்த நாள் எதர்ச்சியாக அவருடைய ஊரிலிருந்து கிழக்குப் பக்கமாக சென்று பின்னர் வடக்கு பக்கம் உள்ள ஊருக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு ஒரு இடம் வாங்கி உள்ளார். தற்போது அந்த இடத்தில் அவருடைய வாழ்க்கை மிகவும் செல்வம் நிறைந்த வளர்ச்சி பெற்று செல்வதாக மாறி உள்ளார்.

பின்னர் சித்தரின் வார்த்தைகளை உணர்ந்த அவர் உடனே சித்தரை வந்து பார்த்துவிட்டு ஆசையும் பெற்று சென்றுள்ளார்.

ஒரு முறை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள ஒரு வெளிநாட்டு தம்பதியினர் கணக்கம்பட்டி சித்தரால் அடைந்த பயன்தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆகும்.

வெளிநாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு தன்னுடைய மகன் பேச்சு திறமையை இழந்ததால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அங்கிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். சிகிச்சையில் எந்தப் பயனும் பெறாத அவர்கள் மன வருத்தத்துடன் பழனிமலை உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர்.

அந்த வெளிநாட்டவர்கள் பழனியில் உள்ள முருகன் கோவிலை தரிசிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்றுள்ளனர். அப்போது கணக்கம்பட்டி மலையாக செல்லும்போது சித்தரின் அருகில் சென்றதும் காரானது தானாக நின்று இருக்கிறது.

அப்போது காரை நிறுத்தி வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் சித்தர் அவர்களை அழைத்துள்ளார். அந்த காரில் இருந்த
பெண்மணியும் ஒருவித பயம் கலந்த தயக்கத்தோடு சித்தரை நோக்கி சென்று பேசி உள்ளார். அந்தப் பெண்மணி இடத்தில் சித்தரானவர் எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு பிரியாணி பொட்டணம் ஒன்று வாங்கி வா என்று கூறியுள்ளார்.

அருகில் உள்ள கடைக்கு சென்று பிரியாணி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் அந்த வெளிநாட்டு தமிழ் குடும்பத்தார் ஒரு சைவ சாப்பிடக்கூடியவர்கள் ஆகும். என்னை ஒரு பிரியாணி வாங்க சொல்கிறாரே என்று அந்த குடும்பத்தார்கள் ஒருவிதமான தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டு வந்துள்ளனர்.

சித்திர இடம் பிரியாணியை கொண்டு வந்த அந்த பெண்மணி இந்தாருங்கள் என்றார். உடனே சித்தர் அந்த பிரியாணி பொட்டணத்தை உங்களுடைய மகனுக்கு எடுத்துக் கொடு என்றார். தயக்கத்துடன் பொட்டணத்தை குறித்த அந்த பெண்மணி ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். பிரியாணி வாங்கி வந்த அந்த பொட்டணத்தில் சாம்பார் சாதம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்த பெண்மணியை நோக்கி ஒரு மிகப்பெரிய வாகனம் வருவதைக் கண்ட அவருடைய மகன். அம்மா வண்டி வருது ஓரமா வாருங்கள் என்று கத்த தொடங்கினார்.

அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது இவை அனைத்தும் சித்தரின் விளையாட்டுகள் என்று பிரியாணி வாங்கி வந்த பொட்டணம் சாம்பார் சாதமாக மாறியது மற்றும் வாய் பேசாத தன்னுடைய மகன் வாய் பேசியது இவை அனைத்தும் சித்தரின் மகிமையால் மிகுந்தவை என அவர் சென்ற இடத்தை நோக்கி கீழே விழுந்து வணங்கி விட்டு சென்றுள்ளனர் அந்த வெளிநாட்டு தம்பதியினர்.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி கோவில் திறக்கப்படும் நேரம்:

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கோவிலின் நடை திறந்திருக்கும்.

மேலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பூஜைகள் இங்கு நடைபெறும்.

• கணக்கன்பட்டி சித்தரின் ஜீவ சமாதியை பார்க்க வரும் பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும்.

• ஒரே நேரத்தில் ஆயிரம் வாகனங்கள் நிற்கக்கூடிய அளவிற்கு இங்கு இடங்கள் அமைந்துள்ளது.

• பழனியில் இருந்து கணக்கம்பட்டிக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு அரசு பேருந்து எந்நேரம் இயக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

The post கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி – Kanakkampatti Siddhar Jeeva Samaathi appeared first on Common People Media.

]]>
https://commonpeoplemedia.in/spiritual/kanakkampatti-siddhar-jeeva-samaathi/feed/ 0 90