அரசியல் – Common People Media https://commonpeoplemedia.in True News Sun, 28 Jan 2024 21:58:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 223532519 காந்தியின் வாழ்க்கை வரலாறு – Mahatma Gandhi History In Tamil https://commonpeoplemedia.in/tamil-history/mahatma-gandhi-history-in-tamil/ https://commonpeoplemedia.in/tamil-history/mahatma-gandhi-history-in-tamil/#respond Sat, 13 Jan 2024 23:39:24 +0000 http://td_uid_68_65a31f2c2a967 காந்தி பற்றிய முழு தகவல்கள்: இந்தியா விடுதலை பெறுவதற்கு அகிம்சை வழியை கடைப்பிடித்து அதில் வெற்றியும் கண்டு இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தியடி அவர்கள். அகிம்சை அல்லது சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்ட அவரது அமைதியான போராட்டம் இந்திய மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டியதோடு அல்லாமல் விடுதலைப் போராட்டத்திற்காக அவர்களை போராட வைக்கும் செய்து பின்னர் விடுதலையும் பெற்றுக் கொடுத்தவர் தான் இந்த மகாத்மா காந்தி.   Biography of Mahatma Gandhi in Tamil […]

The post காந்தியின் வாழ்க்கை வரலாறு – Mahatma Gandhi History In Tamil appeared first on Common People Media.

]]>
காந்தி பற்றிய முழு தகவல்கள்: இந்தியா விடுதலை பெறுவதற்கு அகிம்சை வழியை கடைப்பிடித்து அதில் வெற்றியும் கண்டு இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தியடி அவர்கள். அகிம்சை அல்லது சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்ட அவரது அமைதியான போராட்டம் இந்திய மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டியதோடு அல்லாமல் விடுதலைப் போராட்டத்திற்காக அவர்களை போராட வைக்கும் செய்து பின்னர் விடுதலையும் பெற்றுக் கொடுத்தவர் தான் இந்த மகாத்மா காந்தி.

 

காந்தியின் வாழ்க்கை வரலாறு - Mahatma Gandhi History In TamilBiography of Mahatma Gandhi in Tamil

காந்தியின் முழு பெயர் – மோகன்தாஸ் கரண்சந்த் காந்தி

காந்தியின் பிறந்தநாள் –10/02/1968

காந்தியின் பெற்றோர் பெயர் – கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்லி பாய்

காந்தியின் மனைவி பெயர் – கஸ்தூரிபாயை

காந்தியடிகள் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் – இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும்

காந்தியின் பிள்ளைகள் பெயர் – ஹரியால், மோகன்லால், ராம்தாஸ், தேவதாஸ்

காந்தி திருமணம் செய்த போது அவருக்கு வயது – 13 வயது

காந்தி இறந்த நாள் – 01/30/1948

மகாத்மா காந்தியின் பிறப்பு:

விடுதலைப் போராட்டத்திற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் 1869 ஆம் ஆண்டு கரன்சன் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்லி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

மகாத்மா காந்தியடிகள் தான் இவர்கள் குடும்பத்தின் கடைசி வாரிசு. பின்னாளில் அவரே இவ்வுலகம் முழுவதும் போற்றக்கூடிய ஒரு மிகப்பெரிய தனிமனிதராய் உருவெடுத்து நின்றார்.

 

மகாத்மா காந்தியடிகளுக்கு 16 வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தையான கரன்சிந்த் காந்தியை இழந்தார்.

 

மகாத்மா காந்தியின் திருமணம்:

காந்தியடிகளுக்கு 13 வயது இருக்கும் பொழுது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் காந்தி மற்றும் கஸ்தூரிபாய் தம்பதிகளுக்கு ஹரிலால் மணிலால் ராம்தாஸ் தேவதாஸ் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தன.

காந்தியடிகளின் இளமை பருவம்:

காந்தி பற்றிய முழு தகவல்கள்: திருமண வாழ்க்கையோடு தன்னுடைய பள்ளிப் படிப்பையும் காந்தியடிகள் படித்துக் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பில் சுமாரான மாணவராக திகழ்ந்த காந்தியடிகள் தன்னுடைய 18 ஆம் வயதில் வழக்கறிஞர் படிப்பின் மீது ஆர்வம் அதிகம் கொண்டமையால் அதனை கற்க இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.

வெற்றிகரமாக வழக்கறிஞர் படிப்பை முடித்த காந்தியடிகள் பின்னர் மும்பையில் ஒரு நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

 

இந்த வேலை அவருக்கு வெற்றிகரமாக இல்லாததால் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் விண்ணப்பங்களை நிரப்பும் பணி செய்து கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அங்கே இருந்த ஆங்கிலேயர்கள் முறையற்ற ஆட்சியைக் கண்ட புங்கியிருந்த காந்தியடிகள் அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விண்ணப்பம் நிரப்பும் பணியும் பறிபோனது.

 

பின்னர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தனக்கு ஏற்ற வேலை இருப்பதைக் கண்ட காந்தியடிகள் தாதா அப்துல்லா எனும் கம்பெனியின் உதவியுடன் அங்கே சென்று சிறிது காலம் பணியாற்றினார்.

 

காந்தியடிகள் விடுதலைப் போராட்ட உணர்வு தூண்டியதற்கான முழு காரணங்கள்:

• இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா நாட்டில் தான் முதன் முதலில் விடுதலை ஏற்பட வேண்டும் என்ற உணர்வு அவருக்குள் எழுந்துள்ளது.

• 1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தியடிகள் அங்கு நிலவும் கருப்பு மற்றும் வெள்ளை இன மக்களுக்கு இடையேயான பாகுபாட்டை கண்டு மிகவும் வியந்து போனார் காந்தியடிகள்.

• வெள்ளையர் இல்லாத மக்களை துன்புறுத்துவதும், அவர்களுக்கு மதிப்பளிக்காமலும் சட்டவிரோதமான செயல்களில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்துவதையும் கண்டு பொங்கி எழுந்தார் காந்தியடிகள்.

 

• தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் என்னும் நகரில் ஒரு நீதிமன்றத்தில் பாலக்காடுவதற்காக காந்தி அவர்கள் அவருடைய தலையில் தலப்பாகை அணிந்து கொண்டு சென்றுள்ளார்.

 

• அதனைப் பார்த்த அங்கிருந்து நீதிபதிகள் அந்த தலப்பாகையை அகற்றும்படி கூறினார்கள் ஆனால் அதற்கு காந்தியடிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

• அதன்பின்பு இந்தியா செல்வதற்காக ரயில் பெட்டியில் முதல் வகுப்பில் தகுந்த பயணச்சீட்டுடன் செல்ல தயாராக இருந்தார்.

• இப்போது முதல் வகுப்பில் பயணித்த வெள்ளையர்கள் வெள்ளையர் அல்லாத மக்கள் முதல் வகுப்பில் பயணிக்க தகுதியற்றவர்கள் என்று கூறி காந்தியை அந்த ரயில் நிலையத்திலிருந்து துரத்தி அடித்தனர்.

• இத்தகைய துயரங்களைக் கண்ட காந்தியடிகள் விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டு ஒரு காரணமாக அமைந்தது.

காந்தியடிகள் காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்குதல்:

காந்தி பற்றிய முழு தகவல்கள்: இத்தகைய துரங்களுக்குப் பார்த்த காந்தியடிகள் மீண்டும் தென்னாப்பிரிக்கா நாட்டில் 1894 ஆம் ஆண்டு ‘காங்கிரஸ்’ என்னும் புதிய கட்சியை ஆரம்பித்தார். இதன் நோக்கம் அனைவருக்கும் சுதந்திரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பன போன்ற பல்வேறு கருத்துக்களை காந்தியடிகள் இந்த கட்சியின் மூலம் மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் அவர் ஆரம்பித்த காங்கிரஸ் கட்சிக்கு அவரே பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். குறிப்பாக 1906 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அகிம்சை வழிப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையேற்று நடத்தியதால் பலமுறை அதனால் அவர் சிறைக்கு சென்று வரவும் நேர்ந்தது.

 

பின்னர் அந்நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகள் காந்தியடிகளால் ஓரளவுக்கு சரி செய்யப்படவே அவர் மீண்டும் இந்தியா திரும்பினார்.

 

காந்தியடிகள் மீண்டும் இந்தியா திரும்புதல்:

1. காந்தியடிகள் மீண்டும் இந்தியா வந்த பிறகு ரவீந்திரநாத் தாகூர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோருடன் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் மற்றும் சிறை சென்று திரும்பிய அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டு அவர்களுடன் நட்பு ஏற்பட்டது.

2. 1914 ஆம் ஆண்டு முதன்முறையாக காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக களம் இறங்கினார்.

3. அப்பொழுது உறுதுணையாக இருந்த பால கங்காதர திலகர் போராட்டத்தினால் உயிரிழக்கவே, அதன் பின்னர் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற மிகப்பெரும் நோக்கத்தோடு காந்தியடிகள்
முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

4. பால கங்காதர திலகர் போராட்டம் என்பது ஒரு தீவிரவாத அமைப்பு போன்ற செயல்களைக் கொண்டதாகும். ஆனால் காந்தியடிகள் அகிம்சை வழியை பின்பற்றியதால் பாலகங்காதர திலகரின் பல்வேறு நடைமுறைகள் காந்தியடிகளால் தகர்த்தெறியப்பட்டன.

காந்தியடிகளும் சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்பும்:

1. சம்பரன் சத்தியாகிரகம் (1917)

2. கேடா சத்தியாகிரகம் (1918)

3. ஒத்துழையாமை இயக்கம் (1920-1922)

4. உப்பு சத்தியாகிரக போராட்டம் (1930)

5. வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)

காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு சில வரிகளில்:

• காந்தியடிகள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர் பந்தலில் பிறந்தார்.

• இவருடைய தந்தை பெயர் கரன்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் தாயார் பெயர் போர்பந்தர் என்பதாகும்.

 

• காந்தியடிகள் தன்னுடைய 13 வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

 

• காந்தியடிகள் உடைய 16 வது வயதில் தன்னுடைய தகப்பனாரை இழந்தார்.

• மேலும் காந்தியடிகள் உடைய 19 ஆவது வயதில் தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்வதற்காக இங்கிலாந்து பயணம் செய்தார்.

• இங்கிலாந்து நாட்டில் படிப்பை முடித்த காந்தியடிகள் 1893 ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்து பின்னர் மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டார்.

• தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையர்கள் அல்லாத மக்களை ஆங்கிலேயர்கள் கொடுமைப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்தியடிகள் அவர்களுக்காக போராட்டத்தை தொடங்கி காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்பித்தார்.

• 1902 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டின் ஓரளவு பிரச்சனைகளை சமாளித்துவிட்டு இந்தியா திரும்பியபோதுதான் தெரிந்தது இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவை விட, ஆங்கிலேயர்கள் பல்வேறு மக்களை கொடுமைப்படுத்தியும் கொன்று குவித்து வந்ததையும் அறிந்து மிகப்பெரும் துன்பமுற்று விடுதலைப் போராட்டத்தில் இயங்கினார்.

காந்தி பற்றிய முழு தகவல்கள்

காந்தியடிகளின் இறப்பு:

காந்தி பற்றிய முழு தகவல்கள்: 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காந்தியடிகள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு வருடமும் நடந்தது:

 

1869 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் காந்தியடிகள் பிறந்தார்.

 

• 1882 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

• 1885 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்தார்.

• 1888 ஆம் ஆண்டு ஹரிலால் முதல் குழந்தை பிறந்தது.

• 1890 ஆம் ஆண்டு தேவதாஸ் என்னும் குழந்தை பிறந்தது.

• 1892 ஆம் ஆண்டு மணிலால் என்னும் இரண்டாவது குழந்தை பிறந்தது.

• 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லா கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவிற்கு வேலைக்கு சென்றார்.

 1894 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல் முறையாக இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார்.

• 1897 ஆம் ஆண்டு ராம்தாஸ் என்னும் மூன்றாவது குழந்தை பிறந்தது.

• 1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஜோக்கர்னெஸ் பேக் எனும் நகரில் முதல்முறையாக சத்தியாகிரகம் என்னும் அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

• 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு வந்தார்.

• மேலும் அதே வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி மும்பையில் உள்ள பெட்டார் சாலையில் காந்தியடிகளுக்கு வரவேற்பு விழா வழங்கப்பட்டது.

• 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரவுலட் சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராட்டத் தொடங்கினார் காந்தியடிகள்.

• மேலும் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் காந்தி.

• 1921 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• 1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள்.

• மேலும் அதே ஆண்டு சவுரி சவுரா பகுதியில் போராட்டக்காரர்கள் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ஐந்து நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

• 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி அதற்காக 21 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டமும் இருந்தார் காந்தியடிகள்.

• 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி சுமார் 240 மைல் தூரம் அகமதாபாத்தில் இருந்து தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரகம் பயணத்தை ஆரம்பித்தார்.

• 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் காந்தியடிகள்.

• காந்தியடிகளின் அஹிம்சை வழி போராட்டத்தை கண்டு வியந்து போன ஆங்கிலேயர்கள் கடைசியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது.

• 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காந்தியடிகள் நாதுரம் கோட்சேவால் என்னும் நபரால் மாலை 5 மணி 17 நிமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

The post காந்தியின் வாழ்க்கை வரலாறு – Mahatma Gandhi History In Tamil appeared first on Common People Media.

]]>
https://commonpeoplemedia.in/tamil-history/mahatma-gandhi-history-in-tamil/feed/ 0 119
காமராஜர் வாழ்க்கை வரலாறு – Kamarajar History in Tamil https://commonpeoplemedia.in/tamil-history/kamarajar-history-in-tamil/ https://commonpeoplemedia.in/tamil-history/kamarajar-history-in-tamil/#respond Sat, 13 Jan 2024 23:39:24 +0000 http://td_uid_72_65a31f2cad830 காமராசர் வாழ்க்கை வரலாறு: தமிழகத்தின் ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் என்றால் அது காமராஜர் என்று பலராலும் அறியப்பட்ட ஒன்று. கல்வி என்ற ஒற்றை சொல்லை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வதற்கு வழி வகுத்ததால் இவர் “கல்விக்கு கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்படுகிறார். காமராசர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு என்ன வழியோ அதனை தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்ததால் இவர் “தென்னாட்டு காந்தி” […]

The post காமராஜர் வாழ்க்கை வரலாறு – Kamarajar History in Tamil appeared first on Common People Media.

]]>
காமராசர் வாழ்க்கை வரலாறு:

தமிழகத்தின் ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் என்றால் அது காமராஜர் என்று பலராலும் அறியப்பட்ட ஒன்று. கல்வி என்ற ஒற்றை சொல்லை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வதற்கு வழி வகுத்ததால் இவர் “கல்விக்கு கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.

Kamarajar history in Tamilகாமராசர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு என்ன வழியோ அதனை தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்ததால் இவர் “தென்னாட்டு காந்தி” என்றும் அழைக்கப்படுகிறார்.

 

 

மக்களுக்காக எண்ணற்ற நலன்களை செய்த காமராசரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் வாழ்க்கை வரலாற்றையும் மேலும் அவர் நடத்திய ஆட்சி முறை பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.

Biography of Kamarajar in Tamil

• காமராஜரின் பிறந்தநாள் – ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார்

• காமராஜர் பிறந்த ஊர் – இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம்

 

• காமராஜரின் படிப்பு – இளம் வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியவில்லை

 

• காமராஜரின் பெற்றோர் – குமாரசாமி மற்றும் சிவகாமி

• காமராஜரின் இறப்பு – அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆவது வருடம்

காமராஜரின் பிறப்பு: 

குமாரசாமி நாடார் மட்டும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி காமராஜர் மகனாக பிறந்தார். தம்முடைய இளம் வயதிலேயே அவருடைய தந்தை இறந்ததால் அவரால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

காந்தி பற்றிய முழு தகவல்கள்

காமராஜர் என்னும் பெயர் வர காரணம்:

குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாமல் பிறந்தார் காமராஜர். மேலும் குமாரசாமி நாடார் தம்முடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் மூலம் இவர் பிறந்தார் என கருதி “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். ஆனால் அவருடைய தாயார் சிவகாமி அம்மையார் அவ்வாறு அழைக்காமல் “ராஜா” என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் நாளடைவில் காமாட்சி என்ற பெயர் “காமாட்சி + ராஜா = காமராஜர்” இரண்டு பெயர்களும் ஒன்றாக இணைந்து காமராஜர் என்று ஆனது.

காமராஜரின் ஆரம்ப கால வாழ்க்கை:

காமராஜரின் தாயாரான சிவகாமி அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் அதில் ஒருவரான கருப்பையா நாடார் என்பவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். காமராஜர் இளம் வயதிலேயே தம்முடைய தந்தையை பிரிந்ததால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதுவும் அவருடைய மாமாவான கருப்பையா நாடார் துணிக்கடையிலேயே வேலையில் சேர்ந்தார்.

காமராஜரின் அரசியல் ஈடுபாடு:

துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சுதந்திர போராட்டப் பேச்சுக்களை கேட்பதில் ஆர்வமாக இருந்தார், அப்போது வரதராசலூர் நாயுடு, சத்தியமூர்த்தி மற்றும் திரு வி கா ஆகியோரின் தேச பெருந்தலைவரின் அரசியல் பேச்சைக் கேட்டு அவருடைய மீது கொன்ற பற்று காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

மேலும், 1920 ஆம் ஆண்டு காமராஜரின் தன்னுடைய 16 வது வயதில் “காங்கிரஸ்” கட்சியில் ஒரு சிறு தொண்டனாக சேர்ந்து நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எண்ணற்ற விடுதலை போராட்டத்தில் இறங்கி செயல்பட தொடங்கினார்.

காமராஜர் கட்சியில் மேன்மேலும் வளர்தல்:

ஆரம்பத்தில் காமராசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது பொதுக்கூட்டங்களுக்கு செல்வது மற்றும் அங்கு பேசும் அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்பது என்று இருந்தார். பின்னர் அவரின் அதீத அரசியல் ஈடுபாடு காரணமாக நேரடியாக கட்சியில் இறங்கத் தொடங்கினார் காமராஜர்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்காக கொடி கட்டுவதில் இருந்து தொடங்கி மக்களுக்கு கொடுக்கப்படும் துண்டு பிரச்சாரங்களை தாமே இறங்கி அனைவருக்கும் விநியோகிக்க தொடங்கினார். இவரது ஆர்வத்தை பார்த்த காங்கிரஸ் கட்சியானது அவருக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை அளித்தது.

 

 

அப்போதைய காலகட்டங்களில் காமராஜர் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்காமல் கட்சி மற்றும் கட்சி பணிகள் என்று ஓடிக்கொண்டே இருந்ததால் அவருடைய பெற்றோர் அவருடைய வாழ்க்கை கெட்டி விடுமோ எனக் கருதி அவரை கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் காமராஜருக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் அவர் வீட்டிலேயே இருப்பார் எங்கும் செல்ல மாட்டார் என்று கருதி அவருக்கு திருமண பேச்சு நடைபெற்றது ஆனால் அதனை அடியோடு தவிர்த்து விட்டார் காமராஜர்.

காமராஜர் முதல் முறையாக சிறை செல்லுதல்:

அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்பின் மீதான இறக்குமதி வரி விண்ணை தொடவே, காந்தியடிகள் உப்பிற்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மேலும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற படியும் அவர் செய்தார்.

1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்த ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் என பெயரிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டவர்.

 

 

மேலும் அந்த சிறையில் ஒரு வருட காலம் வரை தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

காமராஜரின் அரசியல் முன்னேற்றம்:

அதன் பின்னர் காமராஜர் எண்ணற்ற கட்சிப் பணிகளை செய்து, 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக சத்தியமூர்த்தியும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக காமராஜரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து ஒன்றின் வழக்கில் காமராஜர் முக்கிய கைதியாக சேர்க்கப்பட்டார். அப்போது வழக்கறிஞராக இருந்த வரதராசு நாயுடு என்பவரின் வழக்காடும் திறமையால் காமராஜரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் காமராசர் விடுதலை பெற்றார்.

அதற்குப் பின்னரும் மேலும் பல வழக்குகளில் கைதான காமராஜர் 9 மாதங்கள் வரை சிறையில் இருந்தார்.

1942 ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டதால் 3 ஆண்டுகள் வரை சிறை செல்லும் நிலை ஏற்பட்டது.

காமராஜர் தமிழக முதல்வர் ஆகுதல்:

அப்போது கட்சி தலைமையில் இருந்த ராஜாஜி அவர்கள் அரசியலில் இருந்த பல்வேறு சிக்கல்கள் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. மேலும் 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுப்பிரமணியன் என்பவரை எதிர்த்து காமராஜர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த வாக்கெடுப்பில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்:

காமராஜரின் ஆட்சியில் தான் முதன் முதலில் இலவச கல்வி மற்றும் மாணவர்களுக்கான சீருடை மேலும் மதிய உணவு திட்டம் ஆகிவற்றை அறிமுகப்படுத்தினார்.

அப்போது நாட்டில் மூடப்பட்டு கிடந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் திறந்து, மேலும் 17 ஆயிரம் புதிய பள்ளிக்கூடங்களில் திறக்க வைத்தார்.

 

 

இதனால் இவரை மக்கள் அனைவரும் “கல்வி கண்கள் காமராஜர்” என்று அழைக்கின்றனர்.

அப்போது உள்ள காலகட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது எண்ணி வேதனை உற்றார். மேலும் வறுமையின் காரணமாகவும் பசியின் காரணமாகவும் சிறு குழந்தைகள் வேலைக்கு செல்வதை உணர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை 27 ஆயிரம் அளவிற்கு அதிகரித்தார் காமராஜர்.

முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் மதிய உணவு திட்டத்தை செயல்பட தொடங்கி வைத்தார். அப்பொழுது மாணவர்கள் ஒருவேளை உணவுக்காக பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள் முதலில் ஒரு பள்ளியில் மட்டும் தொடங்கிய காமராஜர் பின்பு 4 பள்ளிகளுக்கு இந்த திட்டம் செயல்படும்படி விரிவு படுத்தினார்.

இதனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு ஆர்வமற்ற காமராஜர், பின்னர் நாடு முழுவதும் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

முதலில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. அதுவரை 180 நாட்கள் வரை செயல்பட்ட பள்ளிக்கூடங்கள் அனைத்தும் 200 நாட்கள் வரை உயர்த்தப்பட்டது.

 

 

அவருக்குப் பின் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் நாடு முழுவதும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

காமராஜரின் பொன்மொழிகள் மற்றும் கவிதைகள்:

• நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.

• தாய்மார்கள் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.

• எந்தவித அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாத அதிகாரம் என்றும் நிலைக்காது.

• ஒரு பெண் படிப்பது ஒரு குடும்பத்திற்கு படிப்பதற்கு சமம் என்பதாகும்.

காமராஜரும் தமிழ்நாடு:

• காமராஜர் பதவியேற்றதும் முதலில் நாட்டு முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்ற கல்வி தொழில் ஆகிய வீட்டிற்கு முன்னுரிமை அளித்தார்.

• நாட்டில் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தார். மேலும் மாணவர்களின் நலன் கருதி அதே உணவு திட்டத்தையும் செயல்படுத்த தொடங்கினார்.

• காமராஜர் ஆட்சியில் தான் முதல் முதலில் எண்ணற்ற அணைகள் கட்டப்பட்டன. அதில் முக்கியமானதாக, பவானி திட்டம், மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய் திட்டம், வைகை அனைத்திட்டம், ஆழியாறு பாசன திட்டம், காவேரி டெல்டா வடிகால் வாரியத் திட்டம், பரம்பிக்குளம் மற்றும் கிருஷ்ணகிரி அரணியாறு ஆகிய நதித்திட்டங்களை ஆரம்பித்தும் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.

• உலகிலேயே முதல் முறையாக குடிநீருக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொட்டி பாலம் ஒன்றை காமராஜர் கட்டிக் கொடுத்தார். இதுதான் இன்றளவும் உலகின் மிகப்பெரிய தொட்டி பாலமாக இருந்து வருகிறது.

• மேலும் நாட்டில் எண்ணற்ற தொழிற்சாலைகள் மற்றும் உருக்கு ஆலைகள் இரும்பு பெட்டி ஆலைகள் ஆகியவற்றை கொண்டு வந்தார்.

காமராஜர் கொண்டு வந்த தொழிற்சாலைகளின் பெயர்கள்:

1. நெய்வேலியில் முதல் முதலில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.

2. பாரத மிகு மின் உற்பத்தி நிறுவனம் செயல்படுத்தப்பட்டது.

3. சென்னையில் உள்ள மணலி என்ற சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.

5. நிலக்கரி புகைப்பட சொல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

6. மேலும் மருத்துவ பணிக்காக கிண்டி அரசு மருத்துவமனையில் சோதனை கருவிகள் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

7. மேட்டூரில் காகித தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

8. பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை

9. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத் கேவி எலக்ட்ரிகல்ஸ்.

10. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்.

11. ஊட்டியில் உள்ள கச்சா ஹிட் பிலிம் தொழிற்சாலை.

12. கிண்டி டெலிபோன்டர் தொழிற்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு – தேசத்தந்தை:

• காமராஜர் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

• தன் வாழ்வில் திருமணம் கூட செய்யாமல் மக்களின் முன்னேற்றம் மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பணிகளை செய்து வந்தார்.

• நாட்டில் இளைஞர்களின் முன்னேற்றத்தை காத்தில் கொண்டு ராமராஜர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பில் சேர்ந்தார்.

• தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்த காமராஜர் அவர் ஒரு வார்த்தை சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரையே நியமித்து விடலாம் என்ற அந்த அளவிற்கு அவர் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர்:

1. 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் முதலில் காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.

2. அதன், பின்னர் வந்த இரண்டாவது தேர்தலில் அதாவது 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர்.

3. பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.

காமராஜரும் விவசாயிகளுக்கு செய்து நன்மையும்:

காமராஜர் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10,000 மேற்பட்ட பம்பு செட்டுகள் மற்றும் மின்சாரம் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நாலடிவில், வந்த கலைஞர் ஆட்சியில் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நாடு முழுவதும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் காமராஜர் நினைவு சின்னங்கள்:

1. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் சிலைகள் வைக்கப்பட்டது.

2. சென்னையில் உள்ள கிண்டியில் காமராஜரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.

3. தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் தொடர்பான வாழ்க்கை வரலாற்று படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மேலும் காமராஜருக்கு மணிமண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

காமராஜரின் வேறு சில பெயர்கள்:

• தென்னாட்டு காந்தி

• படிக்காத மேதை

• வைக்கம் வீரர்

• பெருந்தலைவர்

• கர்மவீரர்

• கல்விக்கு கண் திறந்தவர்

காமராஜரின் ஆட்சியை பற்றி சில வரிகள்:

• இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க முதலமைச்சர்கள் ஒருவராக காமராஜர் தம் ஆட்சியின் மூலம் இந்திய மக்களுக்கு அனைவருக்கும் தனியாக தெரிந்தார்.

• கல்விக்கு கண் திறந்த காமராஜர் தமிழகத்தை 9 ஆண்டு காலம் வரை ஆட்சி செய்து வந்தார்.

• மன்னர் காலத்தை தவிர்த்து காமராஜர் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பலராலும் அறியப்பட்டது.

• காமராஜர் ஆட்சியில் தான் முதன் முதலில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

• எண்ணற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், ஏழைகளுக்கு நல்லது செய்து வந்த காமராஜரின் இறப்புக்கு பின்னர் “பாரத ரத்னா” என்னும் விருது 1976 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு முழு தகவல்கள்:

• ஜூன் மாதம் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்த நாளான அன்று நாட்டின் “கல்வி வளர்ச்சி நாளாக “தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

• அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 2020 ஆம் வருடம் கன்னியாகுமரியில் காமராஜரின் பெயரில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் “காமராஜர் அரங்கம்” ஒன்றை தமிழக அரசு நிதி உள்ளது.

• மேலும் இவரை கௌரவப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் அவருடைய திருவுருவ சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையம் ஒன்றில் காமராஜரின் பெயரை சூட்டி பெருமை படுத்தி உள்ளது.

• மேலும் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இவரின் முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் எளிமை குணம்:

காமராஜர் தான் முதலமைச்சராய் இருந்த ஒன்பது ஆண்டு காலமும் தனக்கென்று ஒரு வீட்டை கூட கட்டிக் கொள்ளவில்லை. அவர் இதுவரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆடைகள் அணிவதிலும் எளிமையே பின்பற்றி வந்தார் கதர் சட்டை மற்றும் புதிய எண்ணமும் காணப்படுவார். எண்ணற்ற பெரும் பிரச்சினைகளை எளிமையாக தீர்த்து வைக்கும் தன்னலமற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

காமராஜரின் மறைவு:

அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆம் ஆண்டு காமராஜர் இவ் உலகை விட்டு மறைந்தார். சாதாரணமான தோற்றமும் தன்னலமற்ற வாழ்க்கையும் வாழ்ந்த காமராஜர் அவர்கள் இந்த உலகை விட்டு சென்றாலும் அவர் நடத்திய ஆட்சி இந்த உலகம் உள்ளவரை பேசப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

The post காமராஜர் வாழ்க்கை வரலாறு – Kamarajar History in Tamil appeared first on Common People Media.

]]>
https://commonpeoplemedia.in/tamil-history/kamarajar-history-in-tamil/feed/ 0 123
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு https://commonpeoplemedia.in/politics/madurai-meenakshi-temple-history-in-tamil/ https://commonpeoplemedia.in/politics/madurai-meenakshi-temple-history-in-tamil/#respond Sat, 13 Jan 2024 23:39:20 +0000 http://td_uid_38_65a31f2857e77 மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இதன் மொத்தப்பரப்பு 65000 சதுர மீட்டர் ஆகும். 2000 […]

The post மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு appeared first on Common People Media.

]]>
மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன.

இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

இதன் மொத்தப்பரப்பு 65000 சதுர மீட்டர் ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இக்கோவில் கி.பி. 1623-1655 ஆண்டுகளில் ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சிறந்த விரிவாக்கம் பெற்றது.

இறைவன் சிவபெருமான் மனித உருவில் சுந்தரேஸ்வரராக அவதாரம் செய்து, கயல் போன்ற கண்களை உடைய மீனாட்சியை வாழ்க்கைத் துணையாக ஏற்று மகிழ்ந்தார்.

இவர்களுக்கென்று இரு கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவிலைச் சுற்றி மிகப்பெரிய நான்கு வாயில்கள் உள்ளன. இங்கே வருகை தரும் அன்பர்கள் கட்டுமானங்களில் காணப்படும் வண்ணமயமான சிற்பங்களைக் கண்டு வியக்கின்றனர்.

இக்கோவிலில் அதிசயக்கத்தக்க பிரம்மாண்டமான ஒரு காட்சி ஆயிரங்கால் மண்டபம். இம்மண்டபத்தில் ஆயிரம் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கலைநயமிக்க சிற்பங்களுடன் உறுதி வாய்ந்ததாக அமைந்துள்ளது.

திருஅண்ணாமலையார் கோயில் தல வரலாறு

எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் தூண்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும். அதன் நடைவழியில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. அதன் நுழைவாயில் அருகில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் தட்டினால் வெவ்வேறு ஒலி எழுப்பும் நுணுக்கங்களைக் கொண்ட கலை படைப்பாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.

இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.

அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் ‘சிவன் முக்திபுரம்’ என்றும் அழைக்கின்றனர்.

இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது.

விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 
1. மூலவர்

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர்.

இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், ‘இந்திர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

2. அம்பாள் சன்னிதி

இத்தளத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம், மரகதக் கல்பச்சைக்கல் லால் ஆனது.

அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார்.

மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது.

பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.

இவருக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன.

மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் ‘தடாதகைப் பிராட்டி’ என்றும் அழைப்பதுண்டு. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார்.

அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிசேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.

மீனாட்சி அம்மன் (மூலவர் இறைவி), சுந்தரேசுவரர் (மூலவர் இறைவன்), முக்குறுணி விநாயகர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காசி விசுவநாதர், லிங்கோத்பவர், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகர், சண்டிகேசுவரர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேசுவரர், சித்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், உஷா பிரதியுஷா சமேத சூரியனார், விபூதி விநாயகர், 63 நாயன்மார்கள், சப்தரிஷி மாதாக்கள், பைரவர்,மதுரை வீரன், நவக்கிரகங்கள், சங்கப் புலவர்கள், மனைவியர் சமேத மன்னர் திருமலை நாயக்கர் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகள் ஆகும்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 

கோயிலின் அமைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது.

இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.

இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டினாலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.

சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

கலையழகு மிக்க மண்டபங்கள்

கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.

  1. அஷ்ட சக்தி மண்டபம்,
  2. மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
  3. முதலி மண்டபம்,
  4. ஊஞ்சல் மண்டபம்,
  5. கம்பத்தடி மண்டபம்,
  6. கிளிக்கூட்டு மண்டபம்,
  7. மங்கையர்க்கரசி மண்டபம்,
  8. சேர்வைக்காரர் மண்டபம்,
  9. திருக்கல்யாண மண்டபம்,
  10. ஆயிரங்கால் மண்டபம்
  11. வீரவசந்தராயர் மண்டபம்
  12. அஷ்ட சக்தி மண்டபம்
1. அஷ்ட சக்தி மண்டபம்

மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் திருமேனிகளுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.

2. கம்பத்தடி மண்டபம்

கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்.

கம்பத்தடி மண்டபம், நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (கி.பி.1564–1572) கட்டப்பட்டு, பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி செய்யப்பட்டது (1877). சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விசயநகர காலப் பணியாகும்.

அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது.

கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 
3. ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருட்டிண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.

மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், சாலிவாகன ஆண்டு, கி.பி.1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது.

மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.

இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.

4. வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது.

400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூசைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் நெகிழி பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.

2 பிப்ரவரி 2018 (வெள்ளிக்கிழமை) அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டியப் பின்னர், மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது.

இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தது. தற்போது இம்மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
MADURAI MEENAKSHI TEMPLE | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

சிறப்புகள்

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று.

இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.

குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராசகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.

மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

MADURAI MEENAKSHI TEMPLE HISTORY IN TAMIL | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய கட்டுரை
 

செல்வது எப்படி?

1. வான் வழி

மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது.

இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

2. தொடர்வண்டி வழி

மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

3. சாலை வழி

தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.

The post மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு appeared first on Common People Media.

]]>
https://commonpeoplemedia.in/politics/madurai-meenakshi-temple-history-in-tamil/feed/ 0 89